Thursday 9 September 2010

உன் பெயர்..

உனக்காக ஒரு கவிதை எழுத அமர்ந்தாள்
வரும் முதல் எழுத்து உன் பெயரின் முதல் எழுத்து..

பிரியம் எனும் சொல் உன் பெயரில் மட்டுமல்ல
என்னிலும் உணர வைத்தாய்..

ரிங்காரமை ஒலித்து கொண்டு இருக்கும்
என் கைபேசி திரையில் உன் பெயர்!!

தனிமையின் கொடுமையிலும் இன்பம் காண்கிறேன்
உன் பெயரை எழுதும் போது...